சக்கரங்கள்
சக்கரங்கள் என்பவை, நம் சூஷ்ம சரீரத்திலுள்ள சக்தி மையங்கள் ஆகும். மனித உடல், வெறும் ஸ்தூல சரீரம் மட்டும் அல்லாது. மனம், கர்மா, ஞானம் மற்றும் ஆனந்தம் போன்ற பல்வேறு அடுக்குத் தளங்களால் ஆனது. இவைகளை நம் நாட்டு ஞானிகள் "கோஷங்கள்" என்று அழைக்கிறார்கள். இந்தக் கோஷங்களுள் "பிராணமய கோஷம்" அல்லது "சக்தி கோஷம்" என்பது பல்வேறு சக்கரங்களையும், நாடிகளையும் (Energy Channels) கொண்டது. இந்த சக்கரங்கள் மற்றும் நாடிகள் வழியாக, உறங்கிக் கிடக்கும், "குண்டலினி" எனும் ஆன்மிக சக்தி பாயும் போது, அவை, ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தப் பிராணமய கோஷத்தின் வழியா பாயும் சக்தியானது. எல்லா கோஷங்களுக்கும் உணர்வுகளைத்தூண்டுவதால், நல்ல ஆரோக்கியமான தேகமும், மனமும் அடைய ஏதுவாகிறது. இதன் விளைவாக ஆனந்தமும், அமைதியும் ஏற்படுகின்றன.
அந்தச் சக்கரங்களும், நாடிகளும் முறைகேடான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களாலும், மேலும், தவறான கண்ணோட்டங்கள் மற்றும் எதிர் மறையான கர்மாக்களின் சுமையாலும் பாதிப்படைகின்றன. எதிர் மறையான எண்ண அலைகள் ஒருவரின் வாழ்வில் எதிர் மறையான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஆகையால் சக்கரத் தியானம் என்பது, உடலின் சூஷ்மமான பகுதியை எழுச்சி அடையச் செய்வதோடு மட்டும் இல்லாமல், ஆனந்தமான, ஆரோக்கியமான, வாழ்விற்கு அவசியமான, மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தவும் உதவுகின்றது. சக்கரத்தியானம், மூன்று படிகளைக் கொண்டது. அதாவது சக்கரங்களின் தெய்வீக வடிவங்களை அதிர்வடையச் செய்யும். தெய்வீக அஷ்ரங்களைச் சொல்லுதல் (மந்த்ரம்), மற்றும் சரியாக அமரும் விதம் (ஆஸனம்), கைகளின் விரல்களை வைத்துக் கொள்ளும் விதமும் (முத்திரை) முக்கியமானதே. கட்டை விரலின் அடிப்பாகத்தை ஆள் காட்டி விரலால் தொடுவது, ஒரு சிறந்த முத்திரை ஆகும். சித்தாசனத்தில் நல்ல வசதியாக அமர்ந்து கொண்டு, விரல்களை மேல் கூறிய முத்திரையில் வைத்துக் கொண்டு, உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு முழங்காலுக்கு அருகில் வைத்து, கண்களை மூடியவாறு, சக்கரங்களை உருவகித்துக் கொண்டு, அதற்கான பீஜமந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த உச்சாடனம், 7, 9 அல்லது 18 முறைகள் செய்யலாம். தினசரி சக்கரத்தியானம் செய்வதால் சக்கரங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. நம் மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால், வாழ்வைப்பற்றி நமக்கு ஒரு முழுமையான கண்ணோட்டம் கிடைக்கிறது. குண்டலினி சக்தி, சக்கரங்களின் மூலம் பாய்வதால், சூஷ்ம சரீரத்திற்கு சக்தியூட்டுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக ஸ்தூல சரீரத்திற்கும் சக்தி ஊட்டுகிறது.
ஆனந்தமான மற்றும் ஆரோக்கியமான தனி மனிதனை உருவாக்குவதே குறிக்கோளாகக் கொண்ட எங்கள் தியான வகுப்புகளை நடத்தும் Golden Age Foundation, தங்களை ஹ்ருதயப் பூர்வமாக வரவேற்கிறது. தங்கள் வாழ்வு முன்னேற்றமடையவும், ஆனந்தமாக இருக்கவும், ஸ்ரீஅம்மா பகவானை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
1 - மூலாதாரம்
அமைப்பு : நான்கு இதழ்கள் கொண்ட, சிவப்பு நிறத்தாமரை. கறுப்பு நிறலிங்கத்தை மூன்றரைச் சுற்றுக்கள் சுற்றப்பட்ட பொன்னிறகுண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது.
இடம் : பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடையில்
மூலக்கூறு : பூமி
பலன்கள் : குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்தல், ஸ்திரத்தன்மையையும், உயிர் ஆற்றலையும், அதிகரிக்கச் செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : சிறு நீரகம், சிறு நீரகப்பை
பீஜமந்திரம் : லங்
2 - சுவாதிஷ்டானம்
அமைப்பு : ஆறு இதழ்கள் கொண்ட ஆர்ஞ்சு நிறத்தாமரை, உள்ளே சாம்பல் நிற பிறைச் சந்திர வடிவைக் கொண்டது இந்தச் சக்கரம்.
இடம் : பிறப்புறுப்புக்கு மேல்
மூலக்கூறு : நீர்
பலன்கள் : சுயக்கட்டுப்பாட்டையும், நுண்ணுணர்வையும் அதிகரிகச் செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கர்ப்பப்பை, பிறப்புறுப்புக்கள், பெருங்குடல்
பீஜமந்திரம் : வங்
3 - மணிபூரகம்
அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம்.
இடம் : தொப்புள்
மூலக்கூறு : நெருப்பு
பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல்
பீஜமந்திரம் : ரங்
4 - அனாஹதம்
அமைப்பு : பன்னிரண்டு தாமரை இதழ்கள் கொண்ட பச்சை நிறத்துடன் கூடிய இந்தச் சக்கரத்தின் மையத்தில் காணப்படும் அறுகோணவடிவத்தில் பிரகாசமாக ஒளிவீசும் பொன்னிற ஜோதியைக் கொண்டது.
இடம் : மார்பின் நடுவில்
மூலக்கூறு : காற்று
பலன்கள் : அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : இதயம்
பீஜமந்திரம் : யங்
5 - விஷூத்தி
அமைப்பு : பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர் நீலம் கொண்ட சக்கரமாகும்.
இடம் : தொண்டை
மூலக்கூறு : ஆகாயம்
பலன்கள் : சரணாகதியை வெளிக்கொணரும். மறைவான ஆத்மசக்தியின் பரிமாணத்தைத் திறக்கச் செய்யும். புனிதத்துவம் வளரும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : தொண்டை, நுரையீரல்
பீஜமந்திரம் : ஹங்6 - ஆக்ஞா
அமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சுரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும்
இடம் : புருவ மத்தியில்
பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தி, விழிப்புணர்வையும், ஒருமுகப்படுத்தும், தன்மையையும் மலர்ச்செய்யும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி
பீஜமந்திரம் : (ॐ)ஆ... உ... ம்...
7 - சகஸ்ராரம்
அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்ட ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்தில் கொண்டது.
இடம் : உச்சந்தலை
பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன், முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை
பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம்